×

30 சவரன் அபேஸ் 3 பேர் சிக்கினர்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் கமலேஷ் ஜெயின் (37). கடந்த மாதம் 30ம் தேதி இவரது கடைக்கு வந்த நபர், நகை வாங்குவது போல் நடித்து, 30 சவரன் நகைகளை அபேஸ் செய்து தப்பினார். போலீசார் விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, தெள்ளாறு, செட்டிகுளம் குளக்கரை தெருவை சேர்ந்த வினோத் (32) என்பவர், நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகளான கடலூர் மாவட்டம், முஷ்ணம், புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் (24) மற்றும் லோகேஷ் ஆகியோரையும் கைது செய்து, 20 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்….

The post 30 சவரன் அபேஸ் 3 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Kamlesh Jain ,Abase ,Dinakaran ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை